தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தனது உரையை தொடங்கிய ஆளுநர், சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் உரையின்போதும் திராவிட மாடல், அண்ணா, கலைஞர், பெரியார் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து சர்ச்சையாகியிருந்தது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது உரையில் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு நிறைவு செய்தார். ஒன்றிய பாஜக அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர்கள், சட்டப்பேரவையில் மாநில அரசுகளின் உரையை படிக்காமல் புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது.
தமிழ்நாடு அரசின் உரையை தவிர்த்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.