tamilnadu

img

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மாற்று பாலினத்தவர் 8,016 பேர் உள்ளனர்.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். தமிழகத்தில் 17 வயதுடையவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
17 வயதுடையவர்கள் விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பியதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் சாகு தெரிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வரும் நவம்பர் 4, 5, 18, 19-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த பணி டிசம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இறுதி வாக்காளர் பட்டியல் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் என்விஎஸ்பி (NVSP) இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளாது.