திருவள்ளூர், ஜூலை 4- திருவள்ளூர் கட்சி அலுவலகத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பேரவை புதனன்று (ஜூலை 3) மாலை நடைபெற்றது. இதில் ஆறு மாத சந்தா 21க்கான தொகையை கட்சியின் வட்ட செயலாளர் ஆர். தமிழ்அரசு வழங்கினார். அதனை தீக்கதிர் பொது மேலாளர் பாண்டி பெற்றுக் கொண்டார்.
தீக்கதிர் பொறுப்பாளர் கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் என்.கீதா மலை வாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அற்புதம், தமிழரசி, தேவி ஆகியோர் உடனிருந்தனர். வட்ட குழு உறுப்பினர் விஜய குமார் தலைமையில் நடைபெற்ற பேரவை யில் வட்ட குழு உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் பூங்கோதை உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இங்கு ஆண்டு சந்தா 15, ஆறுமாத சந்தா 2, என மொத்தம் 17 சந்தாக்கள் சேகரிக்கப் பட்டது. இதில் தீக்கதிர் பொது மேலாளர் என்.பாண்டி, மாவட்ட பொறுப்பாளர் கே.செல்வராஜ், வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஜி.சூரியபிரகாஷ், டி.மதன், வட்ட குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், வி.ஜோசப், எம்.சி.சீனு, தீக்கதிர் செய்தி யாளர் பெ.ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.