தடுப்பூசி செலுத்தும் நேரம்:
பொது சுகாதாரத்துறை உத்தரவு
சென்னை, ஏப். 16- தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலை யங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவை யான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அறையின் சுவர்களை ஒட்டி மருந்துகளை வைக்காமல், அதில் இருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறு த்தப்படுகிறது.
அதேபோல் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாக தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன். பொதுமக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளர் களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளிக்கிழமை இயங்காது
வண்டலூர்,ஏப்.16- மக்களவைத்தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளிக்கிழமை (ஏப்.19) இயங்காது என நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக் கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.