tamilnadu

img

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், நாமக்கல், திருச்சி,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் மதுரை, திருச்சி, கரூர், வேலூர் ராணிப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் 108 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதியவர்களும் சிறுவர்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

;