சென்னை, ஜூன் 21- தினசரி யோகா பயிற்சி களை செய்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என்று டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத் தலை வர் டாக்டர் வி.மோகன் கூறி யுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோபா லபுரம் மாநகராட்சி மைதா னத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மாநில அமைச்சர் கா.பாண்டிய ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் தொன்மை யான அறிவியலிலிருந்து தோன்றியிருக்கும் யோகா, நம் நாட்டின் பெருமையை பறைசாற்றுகின்ற ஒரு கலை யாகும். நவீன வாழ்க்கை முறை, உணவு உண்ணும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடலுழைப்போ, உடற் பயிற்சியோ போதுமான அளவு இல்லாமை ஆகிய காரணங்களினால் ஏற்படு கின்ற பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொள் கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு அற்புதமான கொடையாக யோகா திகழ் கிறது. இன்றைய காலகட்டத் தில் இது அத்தியாவசியமான தாகவும் இருக்கிறது என்றார். டாக்டர் வி. மோகன் பேசு கையில் யோகா என்பது மிகச்சிறந்த வாழ்க்கைமுறை யுக்தியாகும். உடல் உழைப் பற்ற நிலை, சரியான உறக்க மின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம், செயல் குறை பாடுள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினால் ஏற்படு கின்ற பாதிப்புகளை யோகா குறைக்கிறது. மேற்கூறப் பட்ட பல்வேறு காரணிகள் பொதுவாக வகை இரண்டு நீரிழிவில் காணப்படு கின்றன. ஆகவே, நீரிழிவின் சிறப்பான மேலாண் மைக்கும் மற்றும் அதை கட்டுப்படுத்தவதற்கும் யோகா நன்கு உதவுகிறது,” என்றார்.