tamilnadu

img

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை...

சென்னை:
பயணிகள் ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை 14ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. எனவே, ரயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் இணைந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் தீபாவளி என்றால் கொண்டாட்டம் தான் பட்டாசு எடுத்து சென் றால் திண்டாட்டம் என்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங் களையும் பயணிகளிடம் வழங்கி சோதனை செய்தனர்.அப்போது பயணிகள் யாரும் ரயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது. மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் எழும்பூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.