சென்னை, பிப்.27- கடந்த 2020-இல் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி, சேவைத்துறை யான ரயில்வே-யை, பணம்பறிப் பதற்கான துறையாக மோடி அரசு மாற்றியது. பயணிகள் ரயில் அனைத்தையும் நிறுத்திவிட்டு, விரைவு ரயில்களை மட்டுமே இயக்கி, பல ஆயிரம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறித்தது.
எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடுவோம் என்று முடிவுசெய்த புலம்பெயர் தொழி லாளர்கள், ரயில் கட்டணம் திடீ ரென மூன்று மடங்காக்கப்பட்டதால், அதற்கு பணமின்றி, கால்நடையாக நடந்தே ஊர் சென்ற அவலம் அரங் கேறியது. பலர் வழியிலேயே உயிரை விட்டனர். கொரோனா முடிந்த பிறகும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வில்லை.
மாறாக, கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுகிறோம் என்று கூறி, பயணிகள் ரயில்கள் அனைத் தையும் விரைவு ரயில்களாக மாற்றி, 10 ரூபாய் என்றிருந்த குறைந்தபட்ச கட்டணத்தை 30 ரூபாயாக மோடி அரசு உயர்த்தி யது. இதனால், மாணவ - மாணவி யர், வியாபாரிகள், மூத்த குடிமக் கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட னர். அதிலும் மூத்த குடிமக்களுக் கான சலுகைக் கட்டண ரயில் டிக் கெட்டுக்கள் ரத்து செய்யப்பட்டன.
விரைவு வண்டிகளை ரத்து செய்து விட்டு, பழையபடி பயணி கள் ரயிலாக இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் ரயில் பயணிகள் 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில்தான், நாடாளு மன்ற மக்களவைத் தேர்தல் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்று இருக்கும் நிலையில், மக் களை ஏமாற்றி அவர்களின் வாக்கு களைப் பெறுவதற்காக, திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிப்ரவரி 26 நள்ளிரவு 12 மணி முதல் விரைவு ரயிலாக மாற்றப்பட்ட பய ணிகள் ரயில், மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டு கட்டணமும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இப்போதும்கூட 200 கி.மீ.க்கும் குறைவான தொலைவு செல்லும் ரயில்களில் மட்டுமே பழைய கட்ட ணம் வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைதூர ரயில்களுக்கு இந்த கட்டணக் குறைப்பை அமல்படுத்த வில்லை. இந்த சாதாரணக் கட்ட ணம் அதிவேக விரைவு ரயில் களுக்கு பொருந்தாது எனத் தெரி விக்கப்பட்டு உள்ளது. இது ரயில் பயணிகளிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.