சென்னை, ஜூன் 29- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்ட லங்களில், மணலி தவிர மற்ற மண்டலங்க ளில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. சென்னையில் (ஜூன் 28 வரை) 53 ஆயி ரத்து 762 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், 31 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்த னர். 21 ஆயிரத்து 94 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் மண்டலம் வாரியான பாதிப்பு விவரங்களை மாநக ராட்சி வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் மணலி தவிர மற்ற மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. ராயபுரம் 7,659, தண்டையார்பேட்டை 6,393, தேனாம்பேட்டை 6,033, அண்ணாநகர் 5,740, கோடம்பாக்கம் 5,578, திரு.வி.க.நகர் 4,505, அடையாறு 3290, வளசரவாக்கம் 2,460, அம்பத்தூர் 2,149, திருவொற்றியூர் 2,123, மாத வரம் 1,761, ஆலந்தூர் 1,353, சோழிங்கநல் லூர் 1151, மணலி 920 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உளளது.