சென்னை, மார்ச் 11- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னையில் முதல் கட்ட மாக 1000 கட்டிடங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சுகாதாரப் பணி களை தீவிரப்படுத்தி உள்ளது. பொது மக்கள் கூடும் பஸ் நிறுத்தங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக 1000 கட்டிடங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஜான் வர்கீஸ் கூறியதாவது:- மாநகராட்சி மண்டல அதிகாரி கள், சுகாதார அதிகாரிகள் மூலம் கட்டிடங்கள் அடையாளம் காணப் பட்டு துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன் எச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்தும் வகையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் தனியார் டாக்டர்களின் கூட்டம் நடத் தப்படுகிறது. 700 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், மாநகராட்சி சுகா தாரத்துறை மூலம் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர போக்குவரத்து ஏஜென் சிஸ் மற்றும் கார், வேன் உரிமை யாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநகராட்சி நட வடிக்கையினை தீவிரப்படுத்த உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்த 1,294 பேர் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என பரி சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 741 பேர் வீடுகளில் 28 நாள் மருத்துவக் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப் பட்டுள்ளது. வணிக மால், திருமண மண்டபங்களில் தூய்மை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கை கழுவுதல்
வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க 3 முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று மால் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் களை அறிவுறுத்தி உள்ளோம்.கதவு கைப்பிடி, தியேட்டர் இருக்கைகள், நுழைவு வாசல்கள் போன்றவற்றில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.