காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நதி நீர் பிரச்சனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியது. ஆனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றாலும், மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தற்போது வரை கர்நாடகம் முறையாக காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டு வருவது. இதற்கிடையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்களை தற்போது நடந்தவை போல சித்தரித்துப் பரப்பப்படுகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.