tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... இடைக்கால அறிக்கை தாக்கல்.....

சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா தலைமையிலான குழு தனது இடைக்கால அறிக்கையை வெள்ளியன்று தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு மே 14 வெள்ளியன்று தாக்கல் செய்துள் ளது. நீதிபதி அருணா ஜெகதீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கினார். அப்போது தமிழக அரசின் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு உடனிருந்தார்.மேலும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார்.

;