திருவண்ணாமலை ஒன்றியம் பெரிய கல்லப்பாடி புதூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நெல்லையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கிற்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், சக்கரவர்த்தி, ஜெயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.