சென்னை, ஜூன் 21- மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதி களில் மாடுகளை வளர்க்கவோ, சாலை யில் விடவோ தடை விதிக்கும் வகை யில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநக ராட்சி கடிதம் எழுதியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது எருமை மாடு அவரை முட்டி சுமார் 50 அடி தூரத்துக்கு இழுத்துச் சென்றது. அவரை காப்பாற்ற வந்தவரையும் மாடு முட்டி தள்ளியது. இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்க த்தில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும் மாடு முட்டியது. ஆவடியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை மாடு முட்டியது. திரு வல்லிக்கேணி டி.பி.தெருவில் கஸ்தூரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காய மடைந்தார். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே புதன்கிழமை இரவு சாலை யின் குறுக்கே வந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த பூந்தமல்லியை சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் மாடு முட்டி பொதுமக்கள் பாதிக் கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ் கின்றன. மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் மேய விடுகின்றனர். இந்நிலையில் சென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கும், வளர்க்கவும் தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதி யுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் மாடு களை வளர்க்க 2013ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டுள்ளது. தற்போது மாடு களால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாடுகளை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பரா மரிப்பது இல்லை. எனவே மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடு களை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க அரசிடம் அனு மதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அதி காரிகள் தெரிவித்தனர்.