tamilnadu

சிறுமியை கொன்ற வாலிபர் தப்பி ஓட்டம்

ஆலந்தூர், அக்.29- ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 10 ஆவது தெருவில் வசித்து வருபவர் வேதவல்லி. இவர் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் பாபு, மாதவன். பாபுவுக்கு திருமணமாகி ஈக்காட்டுத் தாங்கலில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். வேதவல்லியின் தம்பியும் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதை யடுத்து அவர்களது மகள் சோபனாவை வேதவல்லி வளர்த்து வருகிறார். அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் வேதவல்லிக்கு உதவியாக இருந்தார். அவர் மீது வேதவல்லி அதிக பாசத்துடன் இருந்தார். இது வேதவல்லி யின் மகன் பாபுவுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக தாய் வேதவல்லியிடம் பாபு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாயன்று (அக்.29) காலை வீட்டில் சோபனா தனியாக இருந்தபோது, அங்கு வந்த பாபு சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வேதவல்லி வீட்டிற்கு வந்தபோது, சோபனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி சோபனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வேதவல்லி, மகன் மாதவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர்.