tamilnadu

img

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், நாளை பதவியேற்று கொள்கின்றனர்.

செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், 28 மாவட்டங்களில் விடுப்பட்ட இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நாளை பதவியேற்பு நிகழ்ச்சியும், வரும் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலும் நடைபெறவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவியேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

;