தொடர்ந்து சரியும் மேட்டூர் அணை நீர் மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமையன்று காலை 98.93 அடியில் இருந்து 98.03 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவும் விநாடிக்கு 3 ஆயிரத்து 355 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 694 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாச னத்திற்கு விநாடிக்கு 15,000 கன அடியும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 62.31 டி.எம்.சி.யாக உள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.
19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் சனிக்கிழமை (செப்.28) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சனிக்கிழமை (செப்.28) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தங்கம் விலை பவுன் ரூ. 57,000-ஐ நெருங்கியது!
சென்னையில் கடந்த செப்டம்பர் 20 முதல் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7 ஆயி ரத்தைக் கடந்துள்ளது. வியாழக்கிழமை தங்கத்தின் விலை யில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 7 ஆயிரத்து 060- க்கும், பவுன் ரூ. 56 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (செப்.27) ஆபர ணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 56 ஆயிரத்து 800-க்கும், கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 7 ஆயி ரத்து 100-க்கு விற்பனையானது.