tamilnadu

img

கட்டுபாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த லாரி

சென்னை, ஆக.22-  மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மேலும் மேம் படுத்த வேண்டுமென்ற அக்கறையுடன், சென்னை  மாநகர காவல்துறை “காவல் கரங்கள்” திட்டத்தை  அமல்படுத்தி வருகிறது. வீடுகளில் தனியாக உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந் துப்பணியை தீவிரப்படுத்தி யுள்ளது.

மேலும் தனியாக  உள்ள மூத்த குடிமக்கள் குறித்து தகவல்களை முன் கூட்டிய அறிந்து அவர் களுக்கு அவசர காலத்தில் உதவி செய்து வருகிறது. இத்தகைய செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில்  மூத்த குடிமக்களை பாது காத்து வரும் அதுல்யா சீனி யர் கேர் நிறுவனம்  காவல் துறையின் “காவல் கரங்கள்” செயல்திட்டத்திற்கு அவசர சிகிச்சை ஊர்தியை  (ஆம்புலன்ஸ்) வழங்கி யிருக்கிறது.

  குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நபர்கள் மற்றும் சாலையோரங்களில் கவனிப்பின்றி விடப்பட்டி ருக்கும் முதியோர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் தொடர்பான சேவைகளை வழங்க  இந்த  வாகனம் உதவும் என்று அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனர் ஜி ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவில் காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.