tamilnadu

img

தமிழகத்தில் மொத்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அறிகுறி தொடர்பான மாதிரிகள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் இன்று (வெள்ளி) ஒரே நாளில் 67,352 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதில் 65,189 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,880 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை மாற்றமில்லாமல் 126 ஆக உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை - 30,88,066

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை - 29,75,657

;