tamilnadu

img

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆக.9ல் துவக்கம்

சென்னை, ஜூலை 31 - சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை (ஜூலை 31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,400-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது”என்றார்.

கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டத்தை’ ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறேன். பட்டங்களோடு சேர்த்து பல்வேறு திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பொன்னம்பலம் அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.