சென்னை,டிச.24- மாநிலத் தகுதித் தேர்வு (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் மூலமே நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச் சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது குறித்து டிசம்பர் 24 அன்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரி யம் 1987-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டு நாளதுவரை செயல்பட்டு வரு கிறது. இந்த வாரியம் அரசுப் பள்ளி களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரி களில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கு தகுதியுள்ள உதவிப்பேராசி ரியர்களை தெரிவு செய்யும் அமைப் பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்திடும் முகவாண்மை நிறுவன மாக (Nodal Agency) அரசால் நிய மிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு 2023-இல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரி யம் மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி நிறுவனங் கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரி யர் பணியாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யவும் ஆணையிடப் பட்டுள்ளது.
1988 முதல் தற்போது வரை பல்வேறு நிலைகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு 1,68,657 ஆசிரியர்கள், விரிவுரை யாளர்கள் மற்றும் உதவிப் பேராசிரி யர்கள் இந்த தேர்வு வாரியத்தால் முறையாக தேர்வு செய்து அனுப்பப் பட்டுள்ளனர். இது தவிர கடந்த ஆண்டு முதலமைச்சரின் அறிவிப் புக்கு இணங்க முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்ற மாணவர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 120 மாண வர்கள் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.
தற்போது தமிழ்நாடு அரசால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மாநில தகுதித் தேர்வினை (SET) நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. இந்த ஆணைக்குட்பட்டு உயர்கல்வித்துறை மற்றும் பல்கலை க்கழக பாட வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களை ஈடுபடுத்திக் கொண்டு மேற்கண்ட தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பல் கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் மூலம் நடத்த வேண்டிய தேசியத் தகுதித் தேர்வு (NET) வெளி முகமையான தேசியத் தேர்வு முகமை (NTA) மூலமே நடத்தப்படு கிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. மாநில தகுதித் தேர்வு (SET) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரி யம் கொண்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை நிறு வனத்துடன் இணைத்து இணைய வழி தேர்வு நடத்துவதற்கும், நேரடித் தேர்வு நடத்துவதற்கும் போதுமான வசதிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளது. எனவே, மாநிலத் தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் மூலமே சிறப்பாகவும் முறையாகவும் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்
பொங்கல் விடுமுறையில் நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாண வர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும். ஏற்கெனவே, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி மாத பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள், கல்வி யாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்து வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.