விழுப்புரம், நவ. 22- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கானை ஒன்றியத்திற்குட் பட்டது கல்யாணம்பூண்டி கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்ற னர். இந்தபள்ளிக்கு மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்று வரக்கூடிய இணைப்புச்சாலை அமைக் கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், என்ன காரணத்தினாலோ ஒப்பந்ததாரர் சாலை போடும் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்று விட்டார். தற்போது பெய்து வரும் மழையால் பள்ளி செல்லும் பகுதியில் மழைநீர் தேங்கி மாணவர்கள் செல்லும் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பள்ளிக்கு சென்று வரு கின்றனர். உடனடியாக பள்ளி இணைப்புச் சாலை பணியை முடிக்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கள் மாவட்ட ஆட்சியர் மற் றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கோரிக்கை எழுப்பி வரு கின்றனர்.