சென்னை, செப். 3 - உளுந்தூர்பேட்டையில் பெண்கள் மற்றும் குழந்தை களை பாலியல் வணி கத்திற்கு பயன்படுத்திய வழக்கில், மகளிர் ஆணை யம் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக, மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா கடிதம் வழங்கியுள்ளார். இந்த கடிதத்தை, மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரியிடம், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் பி. சுகந்தி, மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா ஆகியோர் நேரில் வழங்கினார். கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டையில் சமூக விரோதக் கும்பல் 17 வயது சிறுமி மற்றும் இளம் பெண்களை பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசியல்வாதிகள் தொழி லதிபர்கள் என பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டி ருப்பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளது.
இவ்வழக்கில் குழந்தை கள் மற்றும் பழங்குடி இருளர் சமூகத்தைச் சார்ந்த பெண் களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், குழந்தை களை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய குற்றம் நடந்திருந்தும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை. இருளர் பழங்குடி பெண்களை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தி இருந்தும் எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப் பட்ட நான்கு பேர் ஐந்தே நாட்களில் பிணையில் வெளியே வந்துள்ளனர். இத்தகைய மோசமான சம்பவத்தில் காவல்துறை யின் நடவடிக்கை போது மானதாக இல்லை என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது.
எனவே, இப்பிரச்சனை யில் உடனடியாக குற்றத் தின் தன்மைக்கு ஏற்றபடி வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, குற்றவாளிகள் அனை வரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாநில மகளிர் ஆணையத் தலைவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதி யிலும் இது குறித்த விசார ணையை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.