tamilnadu

img

சாம்சங் தொழிலாளர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது

அமைச்சர்களின் தன்னிச்சையான அறிவிப்புக்கு சிஐடியு கண்டனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு அனைத்து ஆலைகளிலும் அக்.21 வேலைநிறுத்தம்

அரசியல் தலைவர்கள் இன்று நேரில் ஆதரவு

சென்னை, அக். 8 - சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம்  ஏற்றுக்கொண்டதாகவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாகவும் தமிழக அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து சாம்சங் தொழிலாளர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆலைகளிலும் அக்டோபர் 21 அன்று வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைவர்களும் இன்று (அக்.9)  போராட்டக் களத்திற்கு வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகின் முன்னணி நிறுவன மான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு  1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள், தங்கள் மீது சாம்சங் நிறுவனம் நடத்தும்  கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும்  வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 மாதத்தைக் கடந்த போராட்டம்

இப்போராட்டம் செப்டம்பர் 9 அன்று துவங்கியது. தற்போது 1 மாதமாகி விட்ட நிலையிலும், மிகுந்த உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இடையே 5 முறை  நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாங்சங் நிறுவனத்தின் பிடி வாதத்தால் தீர்வு ஏற்படவில்லை. இதனால், தொழிலாளர் களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிஐடியு,  ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம்எல்-லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இந்த பின்னணியில், சாம்சங் தொழிலாளர் பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாணுமாறு தமிழ்நாடு முதல்வர் கடந்த செப்டம்பர் 5 அன்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிறு-குறு  தொழில்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆகியோர்  ஏற்பாட்டில் 6-ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில், முடிவு எட்டப்படாததால்,  7-ஆம் கட்டமாகவும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சிஐடியு கலந்துகொள்ள வில்லை.

அரசு தன்னிச்சையான அறிவிப்பு

ஆனால், இரவு 10 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி. கணேசன்,  டி.ஆர். பி. ராஜா ஆகியோர், ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் 14 கோரிக்கை களை நிறைவேற்ற ‘சாம்சங்’ நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.

தற்போது ஒரு தரப்பினர்தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர் வேலைக்கு சென்றுவிட்டனர். இரண்டு தரப்பினரிடம் நாங்கள் பேசியிருக் கிறோம். முடிந்த அளவு பிரச்சனை தீர்ந்து விடும் என நினைக்கிறோம்” என்றும் அமைச்சர்கள் கூறினர்.

மேலும், “திமுக அரசு பொறுப்பு ஏற்றதி லிருந்து, வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வந்து ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கிறோம் ஓரளவிற்கு இந்த பிரச்சனையில் தொழி லாளர்கள் சுமூகமாகத் தான் போயிருக் கிறார்கள். சிஐடியு சார்பில் எங்களிடம்தான் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இந்த கோரிக்கைக்கு நிர்வாகம் மறுப்பு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு இருப்பதால், அதுபற்றி இப் போது பேச முடியாது. நிர்வாகம் எங்களி டம் தான் பெரும்பான்மையான ஊழியர்கள் இருக்கிறார்கள் எனக் கூறுகிறது. சிஐ டியு சார்பில் எங்களிடம் தான் பெரும்பான்மை யான ஊழியர்கள் இருப்பதாக கூறுகின்ற னர். அதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும். நீதிமன்றத்தில் என்ன உத்தரவு வருகிறதோ, அதற்கு ஏற்றாற்போல் நட வடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் நாங்கள் (அரசு) பார்த்துக் கொள்வோம்” என தெரிவித்தனர்.

அமைச்சர்கள் பேச்சுக்கு  சிஐடியு மறுப்பு

அமைச்சர்களின் செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில், சாம்சங் தொழி லாளர் போராட்டத்தின் உண்மை நிலவரம் குறித்து, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின்’ (சிஐடியு) தலைவர் இ. முத்துக்குமார் பேசினார். அப்போது, “சாம்சங் போராட்டம் தொடர்கிறது. அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொலைக்காட்சியில் ‘உடன்பாடு ஏற்பட் டது’ என்று வரும் செய்தி உண்மைக்கு மாறானது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு, பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல திசை திருப்பும் நடவடிக்கை. இதனை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

30-ஆவது நாள் போராட்டம்

அதனடிப்படையில், சாம்சங் தொழிலா ளர்கள் செவ்வாயன்று (அக்.8) 30-ஆவது நாளாக தங்களின் உறுதிமிக்க வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தை வாழ்த்தி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொழி லாளர்கள் மத்தியில் உரையாற்றினார். சிஐ டியு தலைவர் அ. சவுந்தரராசன், இ. முத்துக் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், செவ்வாய் காலை போராட்டம் நடைபெறும் எச்சூர் திடல்  நோக்கி பேருந்துகளில் வந்த தொழிலா ளர்களை, ஏ.எஸ்.பி. உதயகுமாரின் தலை மையிலான ஆய்வாளர்கள், காவலர்கள் என 100-க்கும் மேற்பட்ட போலீசார்- தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் வரும் பேருந்துகளில் சோதனையிட்டனர்.

மேலும், தொழிலாளர்கள் வந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அராஜகமான முறையில் காவலர்கள் பின்தொடர்ந்ததால், தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காய மடைந்து, திருப்பெரும்புதூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், ஐந்து தொழி லாளர்க்கு ஏற்பட்ட படுகாயம் காரணமாக அவர்கள், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தினந்தோறும் பல்வேறு பகுதி களில் இருந்து போராட்டத்திற்கு பேருந்தில் வரும் தொழிலாளர்களை காவலர்கள் இடை மறித்து அரசுக்கும் நிர்வாகத்திற்கும் ஆதர வாக மிரட்டும் தோனியில் பேசுவதும் அச்சுறுத்துவதுமாகவும் உள்ளனர். காவல்துறையின் இந்த அராஜகத்திற்கு  சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக- அக்டோபர் 21 அன்று, காஞ்சிபுரம் மற்றும்  செங்கல்பட்டு மாவட்டங்களில்  70-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்றும்; “முன்னதாக அக்டோபர் 14 அன்று  படப்பையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்” என்று சாம்சங் இந்தியா தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் தலைவர் இ. முத்துக்குமார் அறிவித்துள்ளார்.

அமைச்சர் மீண்டும் பேட்டி

சாம்சங் தொழிலாளர்கள் செவ்வா யன்றும் போராட்டத்தைத் தொடர்ந்த நிலை யில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “சாம்சங் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக இரண்டு நாளைக்கு  முன்பு சாம்சங் நிறுவனத்துடன் பேசினோம்.  அடுத்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளு டனும், பின்னர் அங்கு பணிபுரியும் தொழி லாளர்களுடனும் பேசினோம். தற்போது போராடும் தொழிலாளர்கள், தங்களின் தொழிற்சங்க உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என போராடுகின்றனர். ஆனால்,  இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம். அதேபோல் போராடும் தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள் ளது. முதலமைச்சர் தொழிலாளர்கள் பக்கம் தான் இருக்கிறார். அனைவருக்கும் ஊதியம் குறைவாக இல்லை எனவும், பலருக்கு மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது என்றும், அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். அரசுத் தரப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்திருக்கிறோம். ஆனால், சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர்” என்றார்.

இன்று போராட்டக்களத்திற்கு வரும் தமிழக அரசியல் தலைவர்கள்!

சாம்சங் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் 30 நாட்களை கடந்த நிலையில், அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு, நாளுக்கு நாள் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் களில் ஒருவரான அந்தரி தாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் புத னன்று (அக்.9) நண்பகல் 12 மணியளவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டப் பந்தலுக்குவருகின்றனர்.