சென்னை, டிச.17- வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு குறித்து ஆட்சி யாளர்கள் கவலைப்படுவ தில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்க ராஜன் கூறினார். கட்சியின் 24ஆவது மாநாட்டை ஒட்டி மணலியில் திங்களன்று (டிச. 16) பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மணலி பகுதிச்செயலாளர் டி.பாபு தலைமை தாங்கி னார். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் பேசுகையில், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 1992ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய சூழ்நிலை மட்டு மல்ல, உலக சூழ்நிலையே மாறி இருக்கிறது. உற்பத்தி, உற்பத்தி திறன் என்பதெல்லாம் பழைய முறையில் இல்லை என்ற சூழ்நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. அப்படியே புதி தாக வேலைக்கு வரும் இளம் தொழிலாளர்களும் பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக் கிறார்கள்.
அதேபோல் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதுகுறித்து ஆட்சியாளர்கள் கவலைப் படுவதில்லை. அன்றாட வாழ்க்கை என்பதே பல குடும்பங்களுக்கு சவாலாக மாறியிருக்கிறது. இது பல வகைகளில் வெடிக்கக் கூடும். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு, பல்வேறு மதங்கள், இனங்கள் இருக்கக் கூடிய நாடு, பல்வேறு மொழி கள் பேசக்கூடிய நாடு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது சாத்தியமில்லை.
பன்முகத்தன்மையை, தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒரு மதச்சார்பற்ற அரசு ஆட்சியில் இருக்க வேண்டும். எனவே மதச்சார்பின்மையை, அரசி யல் சாசனத்தை, ஜன நாயகத்தை, தொழிற்சங்க ஜனநாயகத்தை, தேசிய ஒருமைப்பாட்டை பாது காக்க இந்த பகுதி மக்களும், தொழிலாளர்களும் முன்வர வேண்டும் என்றும் டி.கே.ரங்கராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
எம்.ராமகிருஷ்ணன்
மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் பேசு கையில், இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்தை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றார்.
புதிய தொழிற்சாலை களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால் சென்னை நகரம் முழுவதும் விளையாட்டு மைதானங்களை அதி கரித்து, தேவையான உப கரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மெட்ரோ ரயிலை நீட்டித்திடுக
மாநிலக்குழு உறுப்பி னர் எல்.சுந்தரராஜன் பேசுகையில், சென்னையில் பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். மினி பேருந்துகளை அதிகப் படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை மணலி, எண்ணூர் பகுதிகளையும் இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும். மாத வரம் பால் பண்ணையில் இருந்து மணலி வழியாக எண்ணூர் வரை நீட்டிக்க வேண்டும். தங்கசாலை முதல் செங்குன்றம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.லோக. நாதன், எஸ்.ராணி ஆகி யோரும் பேசினர். முன்ன தாக பகுதிக்குழு உறுப்பி னர் முருகன் வர வேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் அ.விஜயகுமார், கே.எஸ்.கார்த்திஷ்குமார், எல்.பி.சரவணத்தமிழன், எஸ்.பாக்கியலட்சுமி, வி.ஜானகி ராமன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். நீலவேணி நன்றி கூறினார்.