tamilnadu

img

உச்ச நீதிமன்றம் எழுப்பிய சரியான கேள்விகள்!

முஸ்லிம் மாணவியர், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், “1. மாணவிகள் திலகம் இடுவதைத் தடை செய்வீர்களா? 2. முஸ்லிம் மாணவிகளின் பெயர் அவர்களின் மதத்தின் பால் கவனத்தை ஈர்க்காதா? 3. இந்தியா பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு என இப்போதுதான் திடீரென்று நிர்வாகத்துக்குத் தோன்றியதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சரியான கேள்விகள் தான். (அடுத்த விசாரணை நவம்பரில்) தீர்ப்பு எப்படி வருமென்று பார்ப்போம்!” என்று மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன், முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.