ரயில்வே தனியார்
மயத்திற்கு எதிராகவும், ஊழியர்களின் நலன்காக்கவும் அர்ப்பணிப்பு உணர்வோடு போராடிவரும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனை (டிஆர்இயு) பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுப்பீர்.
அ.ஜானகிராமன், பொதுச் செயலாளர், டிஆர்இயு
சென்னை, செப். 1- பத்தாண்டு காலமாக ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்து வந்த ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் ரயில்வே வாரியம், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு-சிஐடியு) தொடுத்த வழக்கில், வேறு வழியின்றி பணிந்து, தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளது.
ரயில்வே தொழிற்சங்க அங்கீ காரத்திற்கு 2013 ல் தேர்தல் நடை பெற்றது. அதன் பிறகு 10 வருடங்கள் கடந்தும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை நடத்திட ரயில்வே அமைச்சர் தயாராக இல்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தொழிற்சங்க அங்கீகார தேர்தலை தள்ளிக்கொன்டே சென்றனர்.
ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை நடத்த வேண்டுமென ரயில்வே வாரி யத்தின் மீது தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு - சிஐடியு) தில்லி உயர்நீதிமன்றத் தில் 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் டிஆர்இயு-வின் வழக்கறிஞர்களது வாதத்திற்குப் பின்னர் தில்லி உயர்நீதிமன்றம் ரயில்வே வாரியத்திற்கு 2023 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
“2013ஆம் ஆண்டு முதல் ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகா ரத்திற்கான தேர்தல் நடைபெற வில்லை. ரயில்வே வாரியம் இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளி லிருந்து 4 மாதங்களுக்குள் தேர்தல் அறிவிக்கை வெளியிட வேண்டு மென உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் அறிவிக்கைக்கு முன்பே, தொழிலாளர் புதிய சட்டத் தொகுப்பு அமலானால் அதன்படி ரயில்வே தேர்தலை நடத்தவும், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு அமலாகவில்லையெனில் அதைக் காரணம் கூறி தேர்தலை நடத்தாம லிருக்கக் கூடாது; எவ்வாறாயினும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்க அங்கீகார தேர்தலை நடத்திட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை நடத்தி தொழிற்சங்க அங்கீகாரம் வழங்குமாறு ரயில்வே வாரிய நிர்வாகத்திடம் டிஆர்இயு கடிதம் கொடுத்தது.
உத்தரவை கிடப்பில் போட்ட ரயில்வே
ஆனால் நான்கு மாதங்களாக ரயில்வே வாரியம், அங்கீகார தேர்தலை நடத்திட எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. நான்காவது மாதம் ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் கமிட்டி ஒன்றை ஓய்வுபெற்ற அதிகாரி ராஜீவ் கிஷோரை தலைவராக நிய மித்து, தேர்தல் நடத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் தேவை என 2023 டிசம்பர் 1 அன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில் 2019 அக்டோபரில் தேர்தல் நடத்த தயாரிப்பு செய்ததாகவும், 2020-ல் கோவிட் வந்ததால் தேர்தல் நடத்த இயலவில்லை எனவும் கூறியது. நாடாளுமன்றத்தில் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பு நிறை வேற்றப்பட்டதால் அது விதிமுறை களாக வெளியாகும் என காத்திருந்த தாகவும் கூறியது. மேலும் பல்வேறு சால்ஜாப்புகளைக் குறிப்பிட்டு, 6 மாத காலத்திற்கு - அதாவது 2024 ஜுன் 3 வரை ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்த கால அவ காசம் வேண்டுமெனவும் ரயில்வே வாரியம் நீதிமன்றத்தில் கோரியது. ஆனால் தில்லி உயர்நீதிமன்றம், டிஆர்இயு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட பிறகு சரியான தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, “நீதிமன்றம் கொடுத்த 4 மாத காலத்திற்குள் தேர்தல் அறிவிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ரயில்வே பதிலுரை தெளிவற்றதாக உள்ளது. எனவே 03.02.2024-க்குள் தேர்தல் அறிவிக்கையை வெளியிட வேண்டுமென” 14.12.2023-ல் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரயில்வே வாரியம் ஜுலை -ஆகஸ்ட் 2024-ல் ரகசிய வாக்கெடுப்பு தேர்த லை நடத்துவதாக உறுதியளித்தது.
மீண்டும் இழுத்தடிப்பு
ஆனால் ரயில்வே வாரியம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஓர் மனுவை தாக்கல் செய்து 2025 ஜனவரி-31 வரை தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டுமெனக் கோரியது.
ஜனவரிக்கு முன்பு வரை மழைக்காலம், மாநில தேர்தல்கள், பண்டிகைக் காலம் எனக் காரணம் கூறி, தேர்தல் நடத்த இயலாதென அந்த மனுவில் ரயில்வே வாரியம் கூறியுள்ளது.
இந்த மனு கடந்த வாரம் ஆகஸ்ட் 22 அன்று விசாரனைக்கு வந்தது. டிஆர்இயு மூத்த வழக்கறி ஞர், “ரயில்வேக்கு தேர்தல் நடத்தும் உத்தேசமில்லை. இத்தனை முறை நீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டித்தும் தீர்ப்பை மதிக்கவில்லை” என சுட்டிக்காட்டினார். அப்போது, “தேர்தல் நடத்த யார் முடிவெடுக்க வேண்டுமோ அந்த அதிகாரி பெய ரை கூறுங்கள்; ரயில்வே வாரிய சேர்மேன் என்றால் நாளை அவரை வரச் சொல்லி உத்தரவிடுவோம். 23.08.24 மீண்டும் வழக்கு நடை பெறும் எப்போது தேர்தல் என இறுதி முடிவினை தெரிவிக்க வேண்டும்” என நீதிபதிகள் காட்டமாக உத்தர விட்டனர்.
பணிந்தது ரயில்வே வாரியம்
இதற்கிடையே, 22.08.24 அன்று இரவே, ரயில்வே அங்கீகார தேர்தல் தேதியை முடிவெடுத்துவிட்டதாக எம்எம்எஸ் ரயில்வே சங்கத் தலை வர் சிவகோபால் மிஸ்ரா அவரது லெட்டர் பேடில், ஏறக்குறைய நவம்பர் மாதத்தில் தேர்தல் நடக்க லாம் என அவர்களது இணைக்கப் பட்ட சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி யிருந்தார். இந்திய ரயில்வே முழுவதும் அவர்களது கடிதம் பரவியிருந்தது.
23.08.24 அன்று காலை முதல் வழக்காக டிஆர்இயு அங்கீகார தேர்தல் வழக்கு வந்தது. ரயில்வே சார்பாக இந்திய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா ஆஜராகி, ரகசிய வாக்கெடுப்பு குறித்து சில விஷயங்களில் முடி வெடுக்க ரயில்வே வாரியத்திற்கு இரன்டு வார கால அவகாசம் தேவை எனக் கூறினார். அதை ஏற்று, செப்டம்பர் 17 வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில், ரயில்வே வாரியம் 2024 டிசம்பர் 4,5,6 தேதிக ளில் இந்திய ரயில்வே முழுவதும் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 9 அன்று ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தை விதிகள் வெளியாகும். செப்டம்பர் 10 அன்று தேர்தல் அறிவிக்கை வெளி யிடப்படும் என விபரங்கள் வெளி யிட்டுள்ளது.
இந்த விபரங்களை டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகி ராமன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். ரயில்வேயின் அனைத்து ஊழியர்களும், இத்தேர்தலில், ரயில்வே தனியார் மயத்திற்கு எதிராகவும், ஊழியர் களின் நலன்காக்கவும் அர்ப்ப ணிப்பு உணர்வோடு போராடிவரும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனை (டிஆர்இயு) பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.