tamilnadu

img

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டாமலேயே பணம் கொள்ளை

முறைகேட்டை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
பிரதமர் கிசான் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து, உரிய விவசாயிகளுக்கு உதவித்தொகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமர் வீடு கட்டும்  திட்டத்தில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் பி.மணி, உளுந்தூர்பேட்டை கே.தங்கராசு, சங்கராபுரம் வை.பழனி, சின்ன சேலம் டி.மாரிமுத்து, திருக்கோவி லூர் ஆர்.ராஜவேல், கெடிலம்  ஜெ.ஜெயக்குமார், களமருதூர்  டி.எஸ்.மோகன், எலவனாசூர் கோட்டை ஆர்.சீனிவாசன், வெள்ளி மலை செல்வராசு ஆகியோர் தலைமையில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிர மணியன், எம்.கே.பூவராகன், டி.எம்.ஜெய்சங்கர், ஏ.வி.ஸ்டாலின்மணி, எம்.ஆறுமுகம், எம்.செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் வே. ஏழுமலை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அரசு புதிய வீடு கட்டித்தர வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

"தன் ஊழல் வெளியே வராமல் இருக்க சமூகத்தையே ஊழல் மயமாக்கு" எனும் பாதையில் மத்திய அரசின் கிசான் திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்கள் வீறு நடை போட்டு வருகிறது என கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லிகா, கோட்டையாம்பாளையம், மாடல் காலனி, புத்தராம்பட்டு, வாணாம்பட்டு உள்ளிட்ட பல ஊராட்சிகளின் பயனாளிகளில் பலர் குற்றம் சாட்டுகின்றனர். சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011இன்படி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் வாணாம்பட்டு ஊராட்சியில் கடந்த 2016-17ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 149 வீடுகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டன. அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடு கட்டுமானத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், ஆர்சிசி தளத்திற்காக 50 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களும் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 4 கட்டங்களாக பயனாளிக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்ட உடன் முதல் தவணை 26,029 ரூபாய் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். அதன்பின் மீதித் தொகை ஒவ்வொரு கட்டமாக பணிகள் முடிந்த பின் அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட வேண்டும்.

இங்குதான் நூதன முறையில் இவர்களுக்கான பணம் கையாடல் செய்யப்படுவதாக கூறுகின்றனர். வீடு ஒதுக்கப்படும் பல பயனாளிகள் தற்போதுள்ள கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக குறிப்பிட்ட கால அவகாசத்தில் வீட்டுப் பணிகளை துவங்க இயலுவதில்லை. இப்படி துவங்கப்படாமல் இருக்கும் பயனாளிகளிடம் வீடு எனக்குத் தேவையில்லை என  ஊராட்சி செயலாளர் மூலம் எழுதி வாங்கப்படு கிறது. சில நேரங்களில் எழுதி வாங்கப்படா மலும் முறைகேடுகள் நடைபெறுகிறது.  பின்னர் வேறு நபருக்கு வீடு ஒதுக்கப்பட்ட தாகக் கூறி அதற்கான தொகை எடுக்கப்படு கிறது. ஆனால் பலரது வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படாமலேயே கட்டப்படாத வீடுகள் கட்டியுள்ளதாக ஆவணங்கள் தயார் செய்து அவர்களது பெயரிலேயே தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது.  வாணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசன் என்பவருக்கு அரசு வீடு ஒதுக்கீடு (எண்: டிஎன் 2384474) செய்தது. ஆனால் அவரது வீடு தற்போதும் ஓடு வீடாகவே உள்ளது.

வீடு முழுமையாகக் கட்டப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தயார் செய்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏழுமலைக்கு வீடு ஒதுக்கீடு  (எண் டி.என் 1438767) செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு இருந்த பழைய கலைஞர் வீட்டை காட்டி முழு தொகையும் எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதற்கான தொகை கிடைக்கவில்லை. ஆசையம்மாள் என்பவருக்கும் (டி.என். 2490892) பழைய கலைஞர் வீட்டை காட்டி 3 கட்ட தொகை எடுக்கப்பட்டுள்ளது. கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவற்றில் நடைபெற்றுள்ள முறை கேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக் குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் நேரில்  மனு அளித்து முறையிட்டுள்ளார். -வி.சாமிநாதன்