tamilnadu

தபால் துறைக்கு தமிழில் தேர்வு இல்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சீர்காழி ஜூலை 13- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அஞ்சல்துறை கோட்ட அளவில் காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. எட்டு பள்ளிகள் கலந்து கொண்ட போட்டியில் சீர்காழி ச.மு.இ மெட்ரிக் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர் கே.யோஷ்வினும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் எஸ்.பரணிதரனும் முதல் பரிசினைப் பெற்றனர்.  அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் எல்.துரைசாமி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ச.மு.இ மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி எஸ்.இராமகிருஷ்ணன், பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு மற்றும் பள்ளியின் முதல்வர் கே.தங்கதுரை ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர்.