tamilnadu

img

காவல் நிலைய பெண் தலைமை காவலர் தற்கொலை

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்த பெண் தலைமை காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அருணா கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர் திங்கள் காலை வீட்டில் யாரும் இல்லாத சமயம்  படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டா வால் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ னையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய் அதிகாலை 4 மணியளவில் அருணா  உயிரிழந்தார். 

இவர் சில வருடங்களாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மரணத்துக்கான காரணம் பற்றி காவல்துறையினர்  விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

;