சென்னை:
கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை அமலில் இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் பெற்றோர்க ளின் விருப்பத்தின் பெயரில் வரலாம் என கூறப்பட்டுள்ளது.அதோடு அக்டோபர் மாதம் சென்னையில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபந்தனைகளுடன் (செப்.29) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்துவரும் கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.
முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை அதிமுகவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்த புறக்கணிப்பு குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.