கும்மிடிப்பூண்டி அருகே பூவலை கிராமத்தில் இருளர் இன மக்கள் பயன்பாட்டில் இருந்த, சுடுகாடு மற்றும் பாதையை தனிநபர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.அருள் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், நிர்வாகிகள் ஏ.எஸ். கண்ணன், பி.மாரியப்பன், சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.