புதுக்கோட்டையில் செவ் வாய்க்கிழமை செய்தியா ளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன் உள்ளிட்டவர்களின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நல்ல முடிவை எடுப்பார் என்று எண்ணுகிறோம். இஸ்லா மிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நிறைய கோப்புகள் ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளன
. அதில் சிறிய அளவிலான கோப்பு களுக்கு அனுமதி தந்துள்ளார். இன் னும் கோப்புகள் உள்ளன. கொடநாடு வழக்கில் தடயவி யல் அறிக்கையினைப் பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நகரும். ஓபிஎஸ், இபிஎஸ் எல்லாரும் பாஜகவிடம் கொத்தடிமைகளாக அவர்களது கட்சியை அடகு வைத் துள்ளனர்.
அவர்களைப் பொறுத்த வரை கொடநாடு வழக்கு குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எந்த நேரத்திலும் அமலாக்க துறை யை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இ.டி, ஐ.டி என யார் வந் தாலும் பிரச்சனை இல்லை” என கூறினார்.