திருவண்ணாமலை, ஆக. 8- திருவண்ணாமலை காந்திநகர் 8 ஆவது தெருவில், சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப்பள்ளியின் வாசல் பகுதியில் இந்த பள்ளம் இருப்பதால், தினசரி ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாகவும், கடந்த ஆக 2 ஆம் தேதி ‘தீக்கதிர்’ நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, ஆபத்தான பள்ளம் இருந்த சாலையை, சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.