tamilnadu

புதிய கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்....

சென்னை:
சென்னை மற்றும் பெரம்பலூரில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.தலைமைச் செயலகத்தில் வியாழனன்று (நவ.5) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை மதுரவாயலை அடுத்த நொளம்பூரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.