tamilnadu

img

‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நிறுவனம்’ ரூ. 525 கோடி மோசடி வழக்கில் பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது!

சென்னை, ஆக. 13 - நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பாஜக வேட்பாள ருமான தேவநாதன் (ஆக.13) கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமை யான ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி’ நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. இந்திய மக்கள் கல்வி முன் னேற்றக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வரும் பாஜக ஆதரவாள ரான தேவநாதன் இந்த நிதி நிறுவனத் தின் தலைவராக இருந்து வந்தார்.  5,000-க்கும் மேற்பட்டோர் இந்த நிறு வனத்தில் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். 

இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக அள வில் வட்டி அளிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்பட்ட நிலையில், பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை இங்கு அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.

இதனிடையே, இந்த நிதி நிறு வனத்தில் பணம் முதலீடு செய்திருக் கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வர்களின் சுமார் ரூ. 525 கோடி பணத்தை திரும்பத் தர மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், 150-க்கும் மேற்பட் டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் பேரில், அப்பிரிவு போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது, தேவநாதன் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது  நிதி மோசடி பிரச்சனை எதிரொலித்தது. ஆனால், பாஜக தலைமை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த விவகா ரம் தொடர்பாக அந்த நிதி நிறுவனத் தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.