சென்னை, ஜூன் 28- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள விக்டோரியா பொது அரங்கத்தை புணரமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித் துள்ளது.
மாநகராட்சியின் கட்டிடப் பிரிவு இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. முக்கிய மான பணிகள் அனைத்து டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 40 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. கட்டிடத்தில் பூச்சுப் பணிகள் மேற்கூரை மற்றும் கோபுரத்தில் டைல்ஸ் கற்கள் பொருத்தும் பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறைவடைந்துவிடும் என்று மாநகராட்சி சிறப்பு திட்டங்கள் துறையின் கண்காணிப்பு பொறியாளர் பி.வி.பாபு தெரிவித்துள்ளார். இந்த பணிகளை தொடர்ந்து அரங்கில் நாற்காலிகள் பொருத் தும் பணி, அருங்காட்சியகம் ஏற்படுத்தும் பணி, அதில் பொருட்கள் வைக்கும் பணி, அரங்க உள்வேலைப்பாடுகள் தொடங்கும் என்று அவர் கூறினார்.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள பொருட்கள் குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் வி. ஶ்ரீராம், லலித்கலா அகடமியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித் தார். இது குறித்து குழுவின் முதலா வது கூட்டம் சமீபத்தில் நிறைவடைந்த துள்ளதாகவும் அவர் கூறினார்.
விக்டோரியா பொது அரங்கத்தின் கட்டிடத்தின் பாரம்பரிய கட்டுமான கலையை மீட்கும் வகையில் மகாராஷ்டி ராவை சேர்ந்த சவானி ஹெரிடேஜ் என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது. அபா நரைன் லம்பா அசோ சியேட் என்ற கட்டிடக்கலை நிறுவனத்து டன் இணைந்து இப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
ஆலயத்தை கட்டுவதை போன்ற பணி இது என்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை தாக்குப்பிடிக்கும் வகையில் நவீன ஏற்பாடுகளும் இந்தப் பணியில் இணைந்துக் கொள்ளப்படும்.
இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட உள்ள தேக்கு மரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தும் தரை மற்றும் கூரை யில் பயன்படுத்தப்பட உள்ள செங்கல், டைல்ஸ் கற்கள் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பெறப்பட்டுள்ளது.