ஆம்பூர், நவ.22- ஆம்பூர் அருகே உள்ளது பேரணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சி. இந்த பாலூர் கிராமத்திலிருந்து வனப்பகுதியில் உள்ள கன்னிக்கோயில் என்னும் பகு திக்கு செல்லும் வழியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற் சாலை உள்ளது. இங்கு வெள்ளியன்று (நவ.22) தொழிலாளர்கள் வேலை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று தென்னை நார் தொழிற் சாலையில் ஊர்ந்து வந்தது. இதை கவனித்த தொழிலா ளர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தக வல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூர் வனக்காப்பாளர்கள் கணே சன் மற்றும் நிஷாந்த் இரு வரும் பொதுமக்கள் உதவி யுடன் மலைப் பாம்பை பிடித்த னர். பின்னர் பிடிபட்ட மலைப் பாம்பை அருகிலுள்ள மாச் சம்பட்டு காப்புக் காட்டில் விட்டனர்.