tamilnadu

வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர் கைது

சென்னை, ஆக. 16- சென்னை முகப்பேரில் வியாபாரி வீட்டில் நகைத் திருடப்பட்டது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

 முகப்பேர் பாடிபுதூரைச் சேர்ந்தவர் நாகராஜ் (51). இவர், கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் பழச்சாறு கடை வைத்து  நடத்தி வருகிறார். நாகராஜ், சில மாதங்க ளுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அந்த நேரத்தில் நாகராஜ் வீட்டின் கதவு பூட்டை உடைத்து,பீரோவில் இருந்த 14 பவுன் தங்கநகை,ரூ.15 ஆயிரம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருட ப்பட்டன.

 இது குறித்து ஜெ.ஜெ.நகர் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரைச் சேர்ந்த வேல்முரு கன் (32) என்பது தெரியவந்தது. இதை யடுத்து  வேல்முருகனை  தேடி வந்த காவல் துறையினர் திருவ்லிக்கேணியில் ஒரு விடுதி யில் தங்கியிருந்த வேல்முருகனை வியாழ க்கிழமை கைது செய்தனர்.