விழுப்புரம், ஜூலை 8- பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலி யுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்க ளின் வாழ்க்கை “கோடைக்காலத்தில் குடிநீர் வற்றியதை” போலவே வறண்டு போய் உள்ளது. 10.5.2000க்கு முன் பணிபுரிந்த டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு 4850 என வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் 1,000 ரூபாயும், ஊதிய நிலு வைத் தொகை 15,750 ரூபாயை வழங்க வேண்டும், மாத ஊதியத்தை 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து வேலை நேரம் நிர்ண யம் செய்ய வேண்டும், 7ஆவது ஊதி யக்குழு பரிந்துரையான அரசாணை எண் 303இன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு பணிக் கொடை, ஓய்வூதியம் வழங்க வேண் டும், பணிக்கருவிகளான டார்ச்லைட், மழைகோட், சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும், கூடுதலாக மோட்டார் இயக்குவதற்கு ஊதியமும், தொட்டி சுத்தம் செய்வதற்கு ஆயிரம் ரூபாய் படியாக வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களை ஆப்ரேட் டர்களுக்கும் வழங்க வேண்டும், துப்பு ரவு பணியாளர்களுக்கு பாக்கியில்லா மல் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இதற்கு முன் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மூன்று முறை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துமூலமாக ஒப்பந்தமும் போட்ட னர். ஆனால் அவை இதுவரை நிறை வேற்றப்படவில்லை. எனவே தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறை வேற்றி வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி கிராம பஞ்சாயத்து ஊழியர் சங் கம் (சிஐடியு) சார்பில் திங்களன்று (ஜூலை 8) திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர்கள் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஜி. சரவணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கே.பாலு வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். சிஐடியு விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.வீராசாமி, செய லாளர் ஆர்.ராஜசேகர், துணைத்தலை வர் ஐ.ஷேக்சலாவுதீன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.குமார், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர் ஜீவா, ஒன்றியத் தலைவர் என்.முனுசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார், டி.எஸ்.மோகன், ஜி. தாமோதரன், என்.பழனிவேல், கே.ஆறு முகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். தனது ஊழியர்கள் பிச்சை எடுப்பது தனக்கான அவமானம் என்பதை உணர்ந்து தமிழக அரசு இனியாவது இவர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா?