tamilnadu

img

காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

சென்னை, ஜூன் 5-காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள  காயி தேமில்லத் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர், “மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க காயிதேமில்லத் குரல் கொடுத் ததை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்” என வலியுறுத்தினார். காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்த காயிதேமில்லத் பிறந்த நாளில் மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை நிலை நாட்டப்பட வேண்டும்” என்றார்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி அனந்தன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக் குமார் உள்ளிட்டோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.