tamilnadu

ஜாக்டோ-ஜியோ போராட்டம் :  அமைச்சர்  புது விளக்கம்

 சென்னை, ஜூலை 8- ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டம் குறித்து தமிழக சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அரசின்  கவனத்திற்கு கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முதலமைச்சரின் கவ னத்தை ஈர்ப்பதற்காக தொடர் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சரின் வேண்டு கோளை ஏற்று மீண்டும் பணிக்குத் திரும்பி னர். அந்த போராட்டத்தின் போது சுமார் 2000 ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தற் காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 270 பேருக்கு இன்னமும் பணி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் பதவி உயர்வு ரத்து, பணியிட மாறுதல் தாங்காமல் இழுத்தடிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே  இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தை யும் கைவிட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்  பினரை அழைத்துப் பேசி கோரிக்கை களை நிறைவேற்றுவதற்கு முதலமைச் சர் முன்வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டி. ஜெயக்குமார், “ஜாக்டோ-ஜியோ அமைப்  பினர் நடத்திய காலவரையற்ற போராட் டத்தின் போது பொதுநல வழக்கு ஒன்று  தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலு வையில் உள்ளதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. சரி செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும்” என்றார்.