tamilnadu

img

இன்சூரன்ஸ் சங்க தலைவர் பாலு காலமானார்

சென்னை, மே 28- தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், அதன் முன்னாள் இணைச் செயலாளருமான தோழர் பாலு (எ) என்.பாலசுப்ரமணியம் செவ்வாயன்று (மே 28) சென்னையில் காலமானார்.1964ல் தஞ்சைக் கோட்ட எல்.ஐ.சி ஊழியர் சங்கம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டபோது, அதன் பதிவுக்கு கையெழுத்திட்ட ஏழு பேரில் தோழர் என்.பாலசுப்பிரமணியமும் ஒருவராவார். துவக்க கால நிர்வாகத்தின் அடக்குமுறைகளை மீறி உணர்வு பூர்வமாக செயல்பட்டவர். இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப் பட்டு இறுதி வரை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து செயலாற்றி வந்தவர்.ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்கள் எஸ்.ராஜப்பா, என்.சீனிவாசன், எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வி.டி.சோமசுந்தரம், சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.வேல்முருகன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் க.சுவாமிநாதன், எஸ். ரமேஷ்குமார், ஆர். ராஜேந்திரன், சீதர், ரவிக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தஞ்சாவூர் கோட்ட காப் பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.தோழர் என்.பாலசுப்பிரமணியத்தின் இறுதி நிகழ்ச்சி புதனன்று (மே 29) காலை 10 மணி அளவில் நெசப்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.