சென்னை, மார்ச் 18 - தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய பாஜக அர சின் ‘பி.எம்.ஸ்ரீ’ (PM SHRI) பள்ளி கள் திட்டத்திற்கு தமிழ்நாடு உடன் படக் கூடாது; இதுதொடர்பாக பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவையும் உடனடியாக கலைக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த சாமி ஆகியோர் விடுத் துள்ள
அறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது: பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் என்ற திட்டத்தை 2022-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி யது. இதில், அனைத்து ஒன்றிய, மாநில, யூனியன் பிரதேசங்கள் இணைய வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியிருந்தது. நாடு முழுவதும் 14,500 பள்ளி கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்வதே இத் திட்டத்தின் (PM SHRI) நோக்கமாகும்.
தேர்வு செய்யப்படும் அரசு பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடை முறைப்படுத்தப்படும், புதிய கல்விக் கொள்கையின் ஆய்வ கங்களாக அந்த பள்ளிகள் மாற் றப்படும் என்பதுதான் ஒன்றிய அர சின் வெளிப்படையான அறிவிப்பு. இந்த திட்டத்தின் வெளிப்படை யான நோக்கம் இவ்வாறு இருக்க அதனை ஏற்றுக் கொள்ளும் வித மாக தமிழ்நாட்டில் PM SHRI பள்ளி கள் துவங்குவதற்கு புரிந்துணர்வு கையெழுத்திட இசைவு தெரிவித்து இருப்பது, தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை முடிவை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தமிழ்நாடு, மேற்குவங்கம், தில்லி, கேரளம், ஒடிசா ஆகிய மாநி லங்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
பஞ்சாப் மாநி லம் முதலில் ஏற்றுக்கொண்டு பின்பு அதனைத் திரும்பப் பெற்றுவிட்டது. பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மாநி லங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது. குறிப் பாக தமிழக அரசுக்கு இந்தாண்டு சமக்ர சிஷா திட்டத்தின் கீழ் வர வேண்டிய 1045.38 கோடியை நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து தமிழக கல்வி அமைச்சர் கூறுகையில் ஒன்றிய அரசு நிர்ப் பந்திப்பதாக கூறியிருக்கிறார் அவ்வாறான எவ்வித நிர்பந்தங்க ளுக்கும் தமிழக அரசு ஆட்படக் கூடாது என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் கீழ் உரு வாக்கப்படும் பள்ளிகளிலும் குறிப்பிட்ட அளவிலான செலவி னங்களை மட்டுமே ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளும் இதர செல வினங்களை மாநில அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மாநில அரசுகளின் துணை கொண்டே தங்களின் குலக்கல்வி திட்டத்தை அமல் படுத்துவதற்கு துடிக்கும் ஒன்றிய அரசின் இந்த போக்கை தமிழக அரசு உறுதியாக நின்று எதிர் கொள்ள வேண்டும்.
ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளை மட்டும் இவ்வாறு பூதாகாரப்படுத்தி காட்டு வது வணிக மயமாக்களுக்கும் வழிவகை செய்யும் என்பதையும் தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும். நஞ்சில் உடலுக்கு ஆரோக்கி யம் தரும் நஞ்சு என ஒன்று எப்படி இருக்க முடியாதோ? அதே போல புதிய கல்விக் கொள்கையில் நல் லது என்று எடுத்துக் கொள்வதற்கு எதுவும் இல்லை அது முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை இந்திய மாணவர் சங்கம் உறுதியாக வலியுறுத்து கிறது.
எனவே, தேசிய கல்வி கொள்கை முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று, தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும், பி.எம். ஸ்ரீ. பள்ளிகளை ஏற்படுத்த போடப் பட்டுள்ள குழுவையும் கலைத்து மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.