சென்னை, அக்.5- சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இப் பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டுத் தீர்வுகாண வலி யுறுத்தி, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் பேசியதன் சுருக்கம் வரு மாறு:
சாம்சங் நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர்கள், சுமார் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்து வருகின்ற னர். இங்கு நவீன கொத்தடி மைகளாக நடத்தப்பட்ட தொழி லாளர்கள், 17 வருடங்களுக்கு பிறகு தற்போது சங்கம் அமைத் துள்ளனர். ஆனால், அதனை நிர் வாகம் ஏற்க மறுக்கிறது. சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கிறது. 4 மாதங்களாக தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறை யும், அரசும் மறுக்கின்றன. அதி காரிகள், அமைச்சர்கள் பல முறை முறையிட்டுப் பேசினா லும் சங்கத்தை பதிவு செய்துதர மறுக்கின்றனர்.
தொழிற்சங்கத்தை ஏற்கு மாறு நிறுவனத்தை கட்டா யப்படுத்த அரசு மறுப்பது ஏன்? தொழிற்சங்கம் அமைத்தால், ‘சாம்சங்’ நிறுவனம் வெளியேறி விடும்; அந்நிய நாட்டு மூலதன வரவு பாதிக்கும், தொழில் வளம் பாதிக்கும் என பல கதைகளைச் சொல்கின்றனர். அப்படியெல் லாம் தொழிற்சாலையை மூடி விட்டு ஓடிவிட முடியாது.
தொழிலாளர்களிடத்தில் கடு மையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்த வந்த அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களையும் கைது செய் கின்றனர். அடிப்படை உரி மைக்காக போராட்டம் நடக் கும்போது, இடதுசாரிகள் வேடிக்கை பார்க்க முடியாது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனு மதி மறுத்துள்ளனர். ‘சாம்சங்’ நிர்வாகத்தின் கடைக்கண் பார்வையில் கூட கோபம் வந்து விடக் கூடாது என்பதற்காக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இந்த நிலை நீடிப்பது, தமிழகமே கொந்த ளிக்கும் போராட்டத்தை நடத்து வதற்கு, அரசே ஊக்குவிப்பதாக அமையும். எனவே, சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதற்கு தொழிற்சங்கத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் ஆற்ற வேண்டிய பல காரியங்கள் உள்ளன. இந்நிலையில், ‘தொழிலாளர்களின் உரிமைக ளை தமிழக அரசு பறிக்கிறது; அதனை எதிர்த்துத் தமிழகமே போராடுகிறது’ என்று பேச்சுக் கள் எழுவதற்கு முதலமைச்சர் இடமளிக்கக் கூடாது. பன் னாட்டு நிறுவனங்களுக்கு அடிபணிந்துதான் மக்களும், அரசும் செயல்பட வேண்டு மென்றால், மக்களின் உரிமை களை எப்படி பாதுகாக்க முடி யும்? அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முடி யாது. அடக்குமுறை ஒரு போதும் வெற்றிபெறாது. இப்பிரச்சனையில் சுமூக தீர்வு காண்பதற்கு சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கே. பாலகிருஷ் ணன் பேசினார்.
உரிமைக்காக உறுதியுடன் இடதுசாரிகள் போராடுவார்கள்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிப ரேசன் அமைப்பின் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி பேசுகையில், “தொழிலாளர்களின் 17 ஆண்டு கால கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அரசு பரிசீலிக்கவில்லை. எனவே, போராட்டத்திற்கு வந்துள்ளோம். தொழிலாளர்கள் போராடுகிறார்கள். தொழிற் சங்கத் தலைவர்கள் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நியாயம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், காவல்துறையும், தொழிலாளர் துறையும் நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளன.
45 நாளில் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். 100 நாட்களை கடந்தும் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சனையில் நிர்வா கத்திற்கு ஆதரவாக அரசு நின்றால், தொழிலாளர்களுக்கு ஆத ரவாக இடதுசாரிகள் வலுவாக நிற்போம்” என்றார்.
அரசியலமைப்புச் சட்ட மீறலை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது!
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசுகை யில், “அரசிய லமைப்பு சட் டத்திற்கு உட் பட்டுத் தான் நாடும், ஆட்சி யும் இருக்க முடி யும். அரசமைப் புச் சட்டத்தை மோடி சீரழிக்கிறார் என்கிறோம். ஒரு பன்னாட்டு நிறுவனம் அரசி யலமைப்பு சட்டத்தை அப்பட்ட மாக மீறுகிறது. அதை அரசு வேடிக்கை பார்க்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் பேசுகையில், “சங்கம் அமைக்கும் உரிமை யை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் திலேயே ரத்தம் சிந்திப் பெற்று விட்டோம். அந்த 100 ஆண்டு போராட்ட உரிமையை ‘சாம்சங்’ நிறுவனம் நிராகரிக்கிறது.
தமிழ்நாட்டில் சங்கம் அமைக்க முடியவில்லை என் றால் வெட்கப்பட வேண்டும். ஆசியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது, தமிழ்நாட்டில் கொண்டாடியவர் தோழர் சிங்காரவேலர். மே தினத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக விடுமுறை கொடுத்தவர் கலைஞர் கருணா நிதி. மே தின நினைவுச் சின்னம் சென்னையில் அமைத்து, முத லமைச்சர் ஆண்டுதோறும் அஞ் சலி செலுத்துகிறார். தொழிலா ளர்களின் உரிமையைப் பாது காத்த மாநிலத்தில், ஒரு நிறு வனம் செய்யும் அடாவடிக்கு, தொழிலாளர் நலத்துறை ஆதர வாக இருப்பது ஏற்புடையது அல்ல. சங்கத்தின் பதிவுக்கு தொழிலாளர்கள் விண்ணப்பித் தால், ‘சாம்சங்’ நிறுவனம் தன்னை விசாரணைக்கு அழைக்க கோரு வதும், அதற்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பேசுவதிலும் என்ன நியாயம் இருக்கிறது?
இடதுசாரிகளின் போராட்டத் திற்கு முதல்நாள் நள்ளிரவில் திடீ ரென அனுமதி மறுப்பது என்ன நியாயம்? முதலமைச்சருக்கு தெரிந்து நடக்கிறதா? காவல் துறை அதிகாரிகளே நடவ டிக்கை எடுக்கிறார்களா? தொழி லாளர் நலன் பாதுக்காக விரும் பும் முதலமைச்சர் ஆட்சியில் இவ்வாறு நடப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தால் அதனை மீறுவோம். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு இந்தப்பிரச்சனைக் குத் தீர்வு காண வேண்டும்” என் றார்.