tamilnadu

கிளாம்பாக்கத்தில் தேவையான உதவிகளை செய்ய அரசு தயார்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு

சென்னை, ஜன.25- கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்து களை இயக்க உரிமை யாளர்களுக்கு தேவையான  உதவிகளை அரசு செய்ய  தயார் என அமைச்சர்  சேகர்பாபு தெரிவித் துள்ளார். சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக் கான செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிதாக புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப் பட்டது.

முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு  பேருந்துகள் கிளாம்பாக்கத் தில் இருந்து இயக்கப் பட்டன. இதனிடையே, ஆம்னி  பேருந்துகள் 24 ஆம்  தேதி முதல் கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்தி லிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டி ருந்தது. மேலும், கோயம் பேட்டில் இருந்து பயணி களை ஆம்னி பேருந்துகள் ஏற்றிச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ஆம்னி பேருந்துகள் நிறுத்த வசதி இல்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆம்னி  பேருந்துகள் , பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ஆம்னி  பேருந்துகள் கோயம்பேடு செல்லாமல் கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், கிளாம் பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த  வசதி இல்லை என்ற கூற்று  தவறு என்றும் அவர் கூறி யுள்ளார்.

ஒரே நேரத்தில் 5 நடைமேடைகள் 77 ஆம்னி  பேருந்துகளை இயக்க வசதி உள்ளது. கிளாம் பாக்கம் பேருந்து நிலை யத்தில் மேலும் 170 பேருந்து கள் நிறுத்தும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது என்றும் அவர் தெரிவித் துள்ளார்.