tamilnadu

ஜூன் 22-இல் மக்கள் கருத்துக் கேட்பு

சென்னை, ஜூன் 18- தமிழ்நாட்டில் மீண்டும் மினி  பேருந்துகளை இயக்க அனுமதி  வழங்க அரசு முடிவு செய்துள் ளது. இதன்படி, தமிழ்நாடு அரசு  ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் எந் தெந்த வழித்தடங்களில் மினி  பேருந்து சேவைகளுக்கு அனு மதி வழங்குவது மற்றும் எவ்வ ளவு பேருந்துகளுக்கு அனுமதி  வழங்குவது என்பதை, அந்தந்த வட்டார போக்குவரத்து அலு வலர்கள்(RTO) முடிவு செய்து, அதற்கான அனுமதியை வழங்  குவார்கள் என்று அரசு அறி வித்திருக்கிறது.

அதிகபட்சமாக 25 கி.மீ., தூரம் வரை மினி பஸ்களை இயக்கவும், இதில் 18 கி.மீ., தொலைவுக்கு சேவை இல் லாத வழித்தடங்களிலும், 8  கி.மீ., தொலைவுக்கு ஏற்க னவே சேவை உள்ள வழித்தடங்  களிலும் அனுமதி வழங்கப் படும் எனவும் வரைவு திட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தவிர்த்து ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம் என்றும், அனைத்து மினி பஸ்களிலும், ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த மினி பஸ் வரைவு  திட்ட அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத் துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இதன்  படி ஜூலை 14ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரி விக்க வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஜூலை  22 அன்று சென்னை தலை மைச் செயலகத்தில் உள்துறை  முதன்மை செயலாளர் தலை மையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.