tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 3 பெண்கள் கைது

சென்னை,ஜூலை 27- சென்னையில் சேலை யூர், கே.கே.நகர், செங்கல் பட்டு உள்பட நான்கு இடங்க ளில் வைத்து 14வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களால் கைவிடப்பட்ட அந்த பெண்  உறவினர் ஒருவரது ஆதர வில் வளர்ந்து வந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதைத் தொடர்ந்து பூசாரி மற்றும்  புரோகிதரான சீனிவாசன், தாமோதரன் உள்பட 6  பேரும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட் டிருந்த நிலையில் இந்த  வழக்கில் மேலும் 2 பேரை  சனிக்கிழமை காவல்துறை யினர் கைது செய்தனர். இதன் மூலம் சிறுமி பாலில் வழக்கில் இதுவரை 8 பேர் போக்சோ சட்டத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

வழக்கறிஞர்கள்  மீது நடவடிக்கை  பார்கவுன்சில் எச்சரிக்கை 

சென்னை,ஜூலை 27- சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்  தேதி பெரம்பூரில் வெட்டி  படுகொலை செய்யப் பட்டார்.

இந்த கொலை சம்பவம்  தொடர்பாக இதுவரை 16  பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர் பாக, காவல்துறையின் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி  பார் கவுன்சில் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறி ஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்கு வது குறித்து ஆலோசிக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட ரேசன் கடையை திறக்க   கோரிக்கை 

சென்னை, ஜூலை 27 - பெரும்பாக்கம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட ரேசன் கடையை விரைந்து திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. yஇது தொடர்பாக கட்சியின் ஊராட்சி  செயலாளர் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஹாசினி ரங்கராஜனிடம் மனு  அளித்தார்.

அதில், மார்க்சிஸ்ட் கட்சியின்  தொடர் கோரிக்கையை ஏற்று மின்சார மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை விரைந்து முடித்து  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு விரைந்து திறக்க வேண்டும். சமூக  நலக்கூடத்தின் பெயர் பலகையை புதுப்பிக்க  வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.