சென்னை, அக்.12- நடப்பு கல்வியாண்டிற் கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக் கான அட்டவணை அக்டோ பர் 14 அன்று (திங்கட் கிழமை) வெளியிடப்பட உள் ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பொதுத்தேர்வு அட்டவ ணையை வெளியிட உள் ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகி யோருடன் மேற்கொண்ட ஆலோ சனையின் பேரில், அவர் களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் அன் பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை (அக்.12) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை யை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.