ஐதராபாத் எரிஉலையால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிப்பு
கொடுங்கையூரில் அமைக்கும் திட்டத்தை கைவிட வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சென்னை, மே 9- ஐதராபாத் எரிஉலையால் அருகில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்க ளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எனவே கொடுங்கையூரில் எரிஉலை ஆலை அமைக்கும் திட்டத்தை கைவிட என்றும் வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியு றுத்தியுள்ளது. ஐதராபத்தில் எரிஉலை அமைக்கப் பட்டதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், அமைப்புச் செயலாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன் மற்றும் சிஎப்ஏ, சென்னை காலநிலை செயல்பாட்டு குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு அண்மை யில் நேரில் சென்று ஆய்வு செய்தது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலை வர் டி.கே.சண்முகம் கூறுகையில், ஐதராபாத் புறநகர் பகுதியில் அமைக் கப்பட்டுள்ள எரிஉலை (கழிவிலிருந்து மின்சாரம்) ஆலை அருகே கார்மிகா நகர், ஒய்எஸ்ஆர் நகர், காபிலா பேட்டை, சாந்தி நகர், சிஎன்ஆர் காலனி, ஸ்ரீ சாய் என்க்ளேவ், அரி தாஸ் பள்ளி, விஎன்எஸ் ஹோம்ஸ், எம்எல்ஆர் காலனி போன்ற குடி யிருப்புகள் குறைந்த வருவாய் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளாகும். இங்கு வசிக்கும் மக்களை சந்தித்து எரி உலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தோம். இதனால் தோல் நோய், சுவாசக் கோளாறு, மலட்டுத் தன்மை, கண் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும், ஆலையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் வசிப்பவர்களுக்கு கடு மையான குமட்டல் துர்நாற்றம் வரு வதாகவும் தெரிவித்தனர். மேலும் மாசுபாடு, நோய்கள் ஏற்படு வதால் மருத்துவ செலவுகளுக்கு கணிசமான அளவு பணத்தைச் செலவிடுவதாகவும், சிலர் மாதத் திற்கு 5,000 ரூபாய்க்கு மேல் செலவிடு வதாகவும் தெரிவித்தனர். நச்சுத் தன்மை வெளியேற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், அந்த பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் வெளியே விளையாடுவதில்லை. இத னால் குழந்தைகளின் விளையாடும் உரிமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பறிக்கப்படுகிறது. குப்பை கிடங்கு மற்றும் எரிஉலை ஆலை இருப்பதால் நிலத்தடி நீரின் தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டி ருப்பதாகவும், 18 நீர்நிலைகள் மாசு பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எரிஉலை ஆலைக்கு கழிவுகளை எளிதாக கொண்டு செல்வதற்காக ஆலைக்கு அருகிலுள்ள குல்லா போச்சம்மா ஏரியின் நடுவில் மண் நிரப்பி சாலை அமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், இதுபோன்ற செயல் களால் ஏரி மறைந்துவிடும் அபாயம் உள்ளது. நான் முகத்தில் மாஸ்க் அணியக் கூடாது என்பதில் உறுதி யாக இருந்தேன். ஆனால் கார்மிக்கா நகருக்குள் நுழைந்த உடனேயே, என் மூக்கு மற்றும் உதடுகளில் ஒருவித எரிச்சல் உணர்வை உணரத் தொடங்கி யதால் மாஸ்க் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஐதராபாத் MSW எனர்ஜி சொல்யூ ஷன்ஸ் (ரீசஸ்டைனபிலிட்டி லிமிடெட்) இயக்கும் எரிஉலை ஆலை, திடக் கழிவு மேலாண்மை விதிகள், 2016ஐ மீறியுள்ளதாக தெலுங்கானா மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த எரிஉலை ஆலை 2020இல் தொடங்கப்பட்டதிலி ருந்து, எச்எல், எச்எப், சிஓ, சிடி+ டிஎச் மற்றும் அவற்றின் சேர்மங்கள், மொத்த ஆர்கானிக் கார்பன், எச்ஜி மற்றும் அவற்றின் சேர்மங்கள், டெயில்